வெயிலுக்கான எச்சரிக்கை
சென்னை: பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:
வளிமண்டல ஆய்வு மையம் தகவலின்படி, தமிழகத்தில் அடுத்து நான்கு நாட்களுக்கு வழக்கத்தை விட வெப்பம் அதிகமாக இருக்கும்.
எனவே பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பாக, மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
பொதுமக்கள் அதிகமான தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும். பயணத்தின் போது தண்ணீர் பாட்டில் உடன் வைத்துக் கொள்ள வேண்டும்.
ORS கரைசல் அவ்வப்போது பருக வேண்டும். தர்பூசணி, ஆரஞ்சு பழம், கிரேப்ஸ் உள்ளிட்ட பழங்களை தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இறுக்கமான ஆடைகளை அணியாமல் இருக்க வேண்டும். வெளியில் செல்லும் போது குடை, தொப்பி போன்றவை அணிய வேண்டும்.
குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், உடல் உபாதைகள் உள்ளவர்கள் மற்றும் இதய நோயாளிகள் வெப்பத்தால் பாதிக்கப்படுவதால் அவர்கள் பகல் நேர பயணத்தை தவிர்க்க வேண்டும்.
மதுபானம், டீ, காபி போன்றவற்றை தவிர்க்க வேண்டும். நிறுத்திய வாகனத்தில் குழந்தைகள் மற்றும் வளர்ப்பு பிராணிகளை விட்டு செல்வதை தவிர்க்க வேண்டும்.
வெயிலால் மயக்கம் அடைந்தால் உடனடியாக 108 எண்னை தொடர்பு கொண்டு உதவி பெற வேண்டும்.