தமிழ்நாடு அரசு பள்ளி சேர்க்கை QR வழியில்!
மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் கல்வித் துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு அரசு, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்க பல்வேறு நவீன நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந்நிலையில், காஞ்சிபுரம் ஒன்றியம் திருப்புட்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் க்யூஆர் கோடு மூலமாக மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்க இது ஒரு புதிய முயற்சி ஆகும். QR Code வழியே விண்ணப்பம் செய்வது பெற்றோருக்கு மிகவும் வசதியாக உள்ளது.