பிளஸ் 1 மறுகூட்டல் முடிவுகள் நாளை வெளியீடு
சென்னை, ஜூன் 28:
பிளஸ் 1 மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் திங்கள்கிழமை (ஜூன் 30) வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
Akwa Academy
இது குறித்து தேர்வுத் துறை இயக்குநர் ந. லதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. தேர்வு எழுதியவர்களில் மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களில், மதிப்பெண் மாற்றமுள்ள மாணவர்களின் பதிவெண் பட்டியல் ஜூன் 30-ஆம் தேதி மதியம் வெளியிடப்படுகிறது.
அந்த விவரங்களை மாணவர்கள் தேர்வுத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.dge.tn.gov.in இல் அறிந்துகொள்ளலாம்.
இந்தப் பட்டியலில் இடம்பெறாதவர்களின் விடைத்தாள்களில் எந்தவித மாற்றமும் இல்லை என்பது தெரிவிக்கப்படுகிறது.
மதிப்பெண் மாற்றமுள்ள மாணவர்கள் மட்டுமே மேற்கண்ட தேர்வுத் துறை இணையதளத்திலிருந்து திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.