Follow us on

Akwa Academy

Akwa Academy
Welcome

Saturday, June 21, 2025

‘உயர் கல்வியில் உலகளாவிய தர மேம்பாடு அவசியம்’

‘உயர் கல்வியில் உலகளாவிய தர மேம்பாடு அவசியம்’
உயர் கல்வியில் தர மேம்பாடு

உயர் கல்வியில் உலகளாவிய தர மேம்பாடு அவசியம்

டாக்டர் வேத் பிரகாஷ் மிஸ்ரா கருத்து

சென்னை, ஜூன் 20: இந்தியாவின் உயர் கல்வி உலகத் தரத்தில் மேம்பட வேண்டும் என மகாராஷ்டிரா தத்தா மாகே மருத்துவக் கல்வி நிறுவன இணைவேந்தர் டாக்டர் வேத் பிரகாஷ் மிஸ்ரா தெரிவித்தார்.

போரூர் ஸ்ரீ இராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய உயர் கல்வியில் தரம், அங்கீகாரம் மற்றும் மேம்பாடு குறித்த சர்வதேச கருத்தரங்கில்

900+ மாணவர்கள் - முதுநிலை மற்றும் ஆராய்ச்சி முனைவர் பட்டதாரிகள் இந்தியாவின் பல மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தோர் - கலந்துகொண்டனர்.

அப்போது, டாக்டர் வேத் பிரகாஷ் மிஸ்ரா கூறியதாவது:

புத்தாக்கங்கள் மற்றும் புதிய சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டு கல்வித் தரம் அமைக்கப்பட வேண்டும். பழைய தரமுறைகள் மாற்றப்பட்டு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். இது மாணவர்களுக்கு வெளிநாடுகளிலும் முன்னேற வழிவகுக்கும்.

இந்தியாவின் உயர் கல்வி உலகளாவிய தரத்தில் மேம்பட்டிருப்பது இன்றியமையாத தேவை எனவும் அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டோர்: ஸ்ரீ இராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன துணைவேந்தர் டாக்டர் உமா சேகர், மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜி சிங், பல் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் தமிழ்ச்செல்வன், கல்வித் துறைத் தலைவர் டாக்டர் லதா ரவிச்சந்திரன் ஆகியோர்.