Follow us on

Akwa Academy

Akwa Academy
Welcome

Saturday, June 14, 2025

திருப்பத்தூர் மாவட்டத்தில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு குட்நியூஸ்.. கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு குட்நியூஸ்.. கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பு
திருப்பத்தூர் மாவட்டம் - உயர்கல்வி கட்டுப்பாட்டு அறை

📢 திருப்பத்தூர் மாவட்டம் - உயர்கல்வி கட்டுப்பாட்டு அறை அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 10, 12-ம் வகுப்பு முடித்த அனைத்து மாணவர்களையும், 100 சதவீதம் உயர்கல்வியில் சேர்ப்பதை இலக்காகக் கொண்டு கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாட்டு அறையின் மூலம் கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. போன்ற படிப்புகள் எவ்வாறு படிப்பது, விண்ணப்பிப்பது, என்னென்ன உதவிகள், சலுகைகள் மற்றும் அவற்றை எப்படி பெறுவது என்பதற்கான முழுமையான தகவல்களை பெறலாம் என கலெக்டர் சிவசவுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.

மேலும், கல்லூரிகளில் உள்ள காலியிடங்கள் குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தொலைபேசி மூலமாகவே கேட்டறிய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாட்டு அறையில் மாணவர்களுக்கு வழிகாட்ட பயிற்சி பெற்ற நிபுணர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

📞 தொடர்பு எண்கள்:
தொலைபேசி: 04179-225223
வாட்ஸ்அப்: 97878 33608

🎯 மாணவர் குறைதீர்வு நாள் கூட்டங்கள்:
ஜூன் முதல் அக்டோபர் வரை 15 நாட்களுக்கு ஒரு முறை, 2 மற்றும் 4-ம் வார வியாழக்கிழமைகளில் கலெக்டர் அலுவலக கூட்டரங்களில் நடத்தப்படுகிறது.

அடுத்த கூட்டம் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது.

இந்த கூட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், கல்வித்துறை, வருவாய்த்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, உயர்கல்வி சேர்க்கை அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.

எல்லா மாணவர்களும் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்து, குறைதீர்வு நாள் கூட்டங்களில் கலந்துகொண்டு பயனடையுங்கள்!