நான் முதல்வன் - UPSC தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை
மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள் 07.03.2023 அன்று தொடங்கி வைத்த நான் முதல்வன் திட்டத்தின் போட்டித் தேர்வுப் பிரிவானது, தமிழக இளைஞர்கள் ஒன்றிய அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற பல பயிற்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC), அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு மையத்துடன் (AICSCC) இணைந்து, யு.பி.எஸ்.சி. குடிமைப் பணித் தேர்வுகளுக்காக பயின்று வரும் மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி, வசதிகள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ்:
- ஒவ்வொரு ஆண்டும் 1,000 மாணவர்கள் மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
- முதன்மைத் தேர்வுக்குத் தயாராக ரூ.7,500 மாத ஊதியம் (10 மாதங்கள்).
- முதன்மைத் தேர்வுக்கு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை.
- மொத்த நிதி ஒதுக்கீடு: ரூ.10 கோடி.
2025 UPSC முதன்மைத் தேர்வுக்குத் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு, நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக ரூ.25,000 ஊக்கத்தொகை நேரடியாக வங்கிக் கணக்கில் வழங்கப்படும்.
இந்த ஊக்கத்தொகையைப் பெற, UPSC முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 21.06.2025 முதல் 02.07.2025 வரை கீழ்கண்ட இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்:
விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்