எம்பிபிஎஸ், பிடிஎஸ்: விண்ணப்ப அவகாசம் ஜூன் 25 -இல் நிறைவு
சென்னை, ஜூன் 20: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 25 மாலை 5 மணி கடைசி நாள் என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகள், ESI மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் 5,200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் 888 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும்.
சுயநிதிக் கல்லூரிகளில் 3,450 மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் 550 இடங்களும் உள்ளன. மொத்தம் 9,200 எம்பிபிஎஸ் இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
496 இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீட்டின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளது.
பிடிஎஸ் படிப்புக்கு: அரசு மருத்துவக் கல்லூரிகளில் 250 மற்றும் தனியார் கல்லூரிகளில் 1,900 இடங்கள் உள்ளன. இதில் 126 இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
மொத்தம் 11,350 மருத்துவ இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. விண்ணப்பப் பதிவு ஜூன் 6 முதல் www.tnmedicalselection.org மூலம் ஆன்லைனில் செய்யலாம்.
இதுவரை 57,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். மாற்றுத்திறனாளிகள் தற்போது உள்ள சான்றிதழுடன் விண்ணப்பிக்கலாம். சான்றிதழ் பதிவேற்ற தேதி பின்னர் அறிவிக்கப்படும்.