அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை - 6
பத்தாம் வகுப்பு & மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத் தேர்வு, ஜூலை 2025
தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் பதிவிறக்கம் செய்தல் - செய்திக் குறிப்பு
நடைபெறவுள்ள ஜூலை 2025 பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத் தேர்வெழுத, விண்ணப்பித்த தேர்வர்கள் (தட்கல் உட்பட) தங்களது நுழைவுச் சீட்டுகளை 25.06.2025 (புதன் கிழமை) பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தனித் தேர்வர்கள் "HALL TICKET" என்பதைக் கிளிக் செய்து, தோன்றும் பக்கத்தில் "SSLC & HSE FIRST YEAR SUPPLEMENTARY EXAM, JULY 2025 HALL TICKET DOWNLOAD" என்பதை தேர்வு செய்து, விண்ணப்ப எண் அல்லது நிரந்தர பதிவெண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து நுழைவுச் சீட்டைப் பெறலாம்.
மேல்நிலை முதலாமாண்டு செய்முறைத் தேர்வுக்கான விவரங்களை, தனித்தேர்வர்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரிடம் தொடர்புகொண்டு அறிந்து கொள்ள வேண்டும். நுழைவுச் சீட்டு இல்லாமல் தேர்வு எழுத அனுமதி இல்லை.
பத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வுக்கு விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் 26.06.2025 (வியாழக்கிழமை) முதல் 28.06.2025 (சனிக்கிழமை) வரை தேர்வு நடைபெற இருக்கும் பள்ளிகளிலேயே தேர்வை எழுத வேண்டும்.
இத்தேர்வர்கள் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களை நேரில் அணுகி செய்முறைத் தேர்வுக்கான பள்ளி விவரங்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.
ஜூலை 2025 பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத் தேர்வுக்கான தேர்வுக்கால அட்டவணையை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்.