40 ஒன்றியங்களில் பணி: ஆசிரியர் கலந்தாய்வில் முன்னுரிமை
சென்னை, ஜூன் 26
ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் 40 ஒன்றியங்களில் மூன்றாண்டுகளுக்கும் மேல் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என கல்வித் துறை அறிவித்துள்ளது.
சுற்றறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
- 2021–2022 கல்வியாண்டில் பொது மாறுதல் கலந்தாய்வில் வழங்கிய வழிகாட்டுதலின்படி, அதிக காலிப்பணியிடங்கள் உள்ள 40 ஒன்றியங்கள் முன்னுரிமை ஒன்றியங்களாக தேர்வு செய்யப்பட்டது.
- 2022-ஆம் ஆண்டில் அந்த ஒன்றியங்களில் மாற்றம் பெற்று தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியர்கள் இவ்வாண்டு (2025-2026) கலந்தாய்வில் முன்னுரிமை பெற தகுதியுடையவர்கள்.
- விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் முன்னுரிமையை தெரிவு செய்தால், 2022-ல் அந்த ஒன்றியத்தில் மாறுதல் பெற்று மூன்று ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றியதை முதன்மைக் கல்வி அலுவலர் உறுதி செய்ய வேண்டும்.
- அனைத்து வகை ஆசிரியர்களும் EMIS இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
முன்னுரிமை தரப்படும் ஆசிரியர்கள் தங்கள் விவரங்களை சரியாக பதிவுசெய்து கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு பள்ளிக் கல்வித் துறையின் அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையை பார்க்கலாம்.